இந்தியா

சந்திரசேகர ராவ் கட்சி வேட்பாளர் திடீர் விலகல்

Published On 2024-03-29 05:37 GMT   |   Update On 2024-03-29 05:37 GMT
  • தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த கேசிஆருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
  • போட்டியில் இருந்து விலகியதற்காக தலைவர் மற்றும் பிஆர்எஸ் ஆர்வலர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் தொகுதியில் சந்திரசேகரராவின் பாரத் ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) வேட்பாளராக முன்னாள் துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரியின் மகள் காவ்யா காடியம் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சந்திரசேகரராவுக்கு எழுதிய கடிதத்தில், காவ்யா தனது முடிவின் பின்னணியில் முந்தைய பிஆர்எஸ் ஆட்சிக்கு எதிரான சமீபத்திய ஊழல் மற்றும் தொலைபேசி ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் கட்சியின் கவுரவத்தைக் குறைத்து விட்டன.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த கேசிஆருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். போட்டியில் இருந்து விலகியதற்காக தலைவர் மற்றும் பிஆர்எஸ் ஆர்வலர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News