இந்தியா

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாமை விட்டு வெளியேற கோரி காங்கிரஸ் போராட்டம்

Published On 2022-06-25 06:40 GMT   |   Update On 2022-06-25 06:40 GMT
  • மகாராஷ்டிரா அரசை கவிழ்க்கும் குதிரை பேரத்தில் அசாம் மாநில பா.ஜனதா அரசு ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
  • மகாராஷ்டிரா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டல் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கவுகாத்தி:

ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முகாமிட்டு உள்ளனர்.

இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அசாமை விட்டு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வெளியேற கோரி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டல் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அசாம் காங்கிரஸ் தலைவர் பூபன்குமார் போரா, ராஜ்புல் உசேன் எம்.எல்.ஏ. எதிர்கட்சி தலைவர் சைதாலியா ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது.

மகாராஷ்டிரா அரசை கவிழ்க்கும் குதிரை பேரத்தில் அசாம் மாநில பா.ஜனதா அரசு ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அசாமில் போராட்டம் நடத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News