இந்தியா

மலைவாழ் மக்களின் பாரம்பரிய உடையணிந்து கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

Published On 2022-10-21 04:09 GMT   |   Update On 2022-10-21 05:07 GMT
  • கேதார்நாத் கோவிலில் பூஜை செய்த பிறகு, பிரதமர் மோடி 9.7 கிமீ கௌரிகுண்ட்- கேதார்நாத் ரோப்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
  • பிரதமர் மோடியின் வருகையையொட்டி இரண்டு புகழ்பெற்ற மலைக்கோயில்களைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார். இங்கு, மலைவாழ் மக்களின் வெள்ளை நிற பாரம்பரிய மற்றும் "ஸ்வஸ்திகா" சின்னம் எம்ப்ராய்டரி பொறிக்கப்பட்ட ஆடை அணிந்து கொண்டு பிரதமர் மோடி இன்று கோவிலில் பூஜை செய்தார்.

இதையடுத்து மோடி பத்ரிநாத் கோவிலுக்கும் செல்ல உள்ளார். இதற்காக இரண்டு கோவில்களிளும் குவிண்டால் கணக்கில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இதைதவிர மாநிலத்தில் தனது இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின்போது, ​​நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி பார்வையிட்டு, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

கேதார்நாத் கோவிலில் பூஜை செய்த பிறகு, பிரதமர் மோடி 9.7 கிமீ கௌரிகுண்ட்- கேதார்நாத் ரோப்வே திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். கேதார்நாத்தில் தனது இரண்டரை மணி நேர நிகழ்ச்சியின்போது, ​​ஆதி குரு சங்கராச்சாரியாரின் சமாதி ஸ்தலத்தையும் மோடி பார்வையிட உள்ளார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி இரண்டு புகழ்பெற்ற மலைக்கோயில்களைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News