இந்தியா
- ஜாவேத் இளம்பெண்ணை கடத்தி சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினார்.
- ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்தார். இதனால் ஜாவேத் வலுக்கட்டாயமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
மும்பை:
மும்பையை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு ஜாவேத் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி போனில் பேசி வந்தனர்.
சம்பவத்தன்று ஜாவேத் அந்த பெண்ணை அங்குள்ள ஒரு ரெயில் நிலையத்துக்கு வருமாறு கூறினார். இதை நம்பி அந்த பெண் அங்கு சென்றார்.
உடனே ஜாவேத் அந்த பெண்ணை கடத்தி சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்தார். இதனால் ஜாவேத் வலுக்கட்டாயமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் ஜாவேத்தின் நண்பர்கள் 3 பேரும் அங்கு வந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக பெண்ணின் தந்தை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.