இந்தியா

திருப்பதியில் அக்டோபர் மாத தரிசன டிக்கெட் வெளியிடும் தேதிகள் அறிவிப்பு

Published On 2024-07-16 10:29 IST   |   Update On 2024-07-16 10:56:00 IST
  • குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
  • வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடும் தேதிகளை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி வருகிற ஜூலை 18-ந்தேதி காலை 10 மணி முதல் 20-ந்தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

அன்று மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஜூலை 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

அக்டோபர் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் ஜூலை 23-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் . ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தி பெறும் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News