இந்தியா
கோலார் தங்கவயல் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் வாபஸ்
- கோலார் தங்கவயல் தொகுதியில் மனுதாக்கல் செய்த அனந்தராஜ் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
- சுயேச்சையாக போட்டியிட விரும்பவில்லை என கூறி அவர் வேட்புமனுவை திரும்ப பெற்றார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் அனந்தராஜ் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வில்லை. அவர் சுயேச்சையாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோலார் தங்கவயல் தொகுதியில் மனுதாக்கல் செய்த அனந்தராஜ் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட விரும்பவில்லை என கூறி அவர் வேட்புமனுவை திரும்ப பெற்றார்.