இந்தியா
நவராத்திரி பிரமோற்சவ விழா: திருப்பதி கோவிலில் 3 வாகனங்களில் ஏழுமலையான் உற்சவம்
- பிரமோற்சவ விழாவில் 6-வது நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார்.
- ஏழுமலையான் கோவிலில் நேற்று இரவு 66 ஆயிரத்து 757 பேர் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழாவில் 5-வது நாளான நேற்று இரவு கருட சேவை நடந்தது.
தங்க கருட வாகனத்தில் உலாவந்த ஏழுமலையானை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பிரமோற்சவ விழாவில் 6-வது நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து இன்று மாலை புஷ்பகவிமான வாகன உற்சவம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு கஜ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.
ஏழுமலையான் கோவிலில் நேற்று இரவு 66 ஆயிரத்து 757 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 395 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.