இந்தியா

சந்திரபாபு நாயுடு மீது கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்- அமைச்சர் ரோஜா

Published On 2022-12-30 07:56 GMT   |   Update On 2022-12-30 07:56 GMT
  • தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிச்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் பரந்த மைதானத்தில் கூட்டத்தை நடத்தாமல் குறுகிய இடத்தில் கூட்டம் நடத்தியதால்தான் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருப்பதி:

அமைச்சர் ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார்.

தரிசனம் முடித்து வெளியே வந்த அமைச்சர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது,:-

தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிச்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் பரந்த மைதானத்தில் கூட்டத்தை நடத்தாமல் குறுகிய இடத்தில் கூட்டம் நடத்தியதால்தான் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து கோர்ட்டு தானாக முன்வந்து சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

மனித உரிமை ஆணையமும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

Tags:    

Similar News