இந்தியா

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முக கவசம் கட்டாயம்

Published On 2023-04-13 07:23 GMT   |   Update On 2023-04-13 07:23 GMT
  • எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
  • கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

புதுடெல்லி:

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News