இந்தியா

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்றும் அமளி: பாராளுமன்றம் 2 மணி வரை ஒத்திவைப்பு

Published On 2022-07-19 06:15 GMT   |   Update On 2022-07-19 06:15 GMT
  • விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம்.
  • கூட்டத் தொடர் நேற்று முதல் தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத் தொடர் நேற்று முதல் தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

கூட்டத் தொடரில், பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News