இந்தியா

டெல்லி மருத்துவமனையில் ஜோதிமணி அனுமதி

Published On 2022-06-18 11:14 GMT   |   Update On 2022-06-18 11:14 GMT
  • போராட்டத்தின் போது போலீஸ் தாக்கியதில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
  • டெல்லி மருத்துவமனையில் ஜோதிமணி எம்.பி. அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள ஆர்.எம்.எல் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:

ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது போலீஸ் தாக்கியதில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி மருத்துவமனையில் ஜோதிமணி எம்.பி. அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள ஆர்.எம்.எல் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News