இந்தியா

குஜராத்தில் கடலில் மூழ்கி 6 பேர் பலி

Published On 2023-05-20 12:30 IST   |   Update On 2023-05-20 12:30:00 IST
  • பரூச் மாவட்டம் முல்லர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர்.
  • 6 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதில் 4 பேர் இளம் வயதுடையவர்கள்.

சூரத்:

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் முல்லர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். அப்போது 8 பேர் கடல் அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்கள். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடலில் தத்தளித்த 2 இளைஞர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 6 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதில் 4 பேர் இளம் வயதுடையவர்கள்.

இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

Tags:    

Similar News