இந்தியா

ஐதராபாத்துக்கு நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை

Published On 2024-11-21 11:26 IST   |   Update On 2024-11-21 11:26:00 IST
  • ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கலாச்சார பிரிவு சார்பில் பிரஜ்னா பிரவாக் என்ற பெயரில் 4 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது.
  • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஐதராபாத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்துக்கு நாளை ஜனாதிபதி திஇந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை காலை டெல்லியில் இருந்து விமான மூலம் ஐதராபாத் வருகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கலாச்சார பிரிவு சார்பில் பிரஜ்னா பிரவாக் என்ற பெயரில் 4 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெறும் மாநாட்டை திரவுபதி முர்மூ தொடங்கி வைத்து பேசுகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஐதராபாத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ரவுபதி முர்மு வருகை

Tags:    

Similar News