இந்தியா

புதிய தலைநகரை மேம்படுத்த ரூ.29 ஆயிரம் கோடி நிதி கேட்ட ஆந்திரா

Published On 2022-09-28 10:41 IST   |   Update On 2022-09-28 10:41:00 IST
  • 89 நிறுவனங்களை இரண்டாகப் பிரிக்கவும் ஆந்திரப் பிரதேச பிரதிநிதிகள் மத்திய அரசை வலியுறுத்தினர்.
  • இரு மாநிலங்களும் ஒருமித்த கருத்துக்கு வரத் தவறியதால், இந்த விஷயத்தில் சட்ட கருத்தைப் பெற முடிவு செய்யப்பட்டது.

திருப்பதி:

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா இடையே நிலுவையில் உள்ள பிரிவினைப் பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் செயலர் அளவிலான கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 14 முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

ஆந்திரா சார்பில், தலைமைச் செயலாளர் சமீர் சர்மா, மூத்த அதிகாரிகள் எம்டி கிருஷ்ண பாபு, கரிகால் வளவன் மற்றும் பிரவீன் பிரகாஷ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர், தெலுங்கானா சார்பில் தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது, ​​சிவராமகிருஷ்ணன் கமிட்டியின் பரிந்துரையின்படி தலைநகர் மேம்பாட்டிற்கு ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதால் ரூ.29 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில பிரதிநிதிகள் மத்திய அரசை வலியுறுத்தினர்.

மேலும், ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 இல் உறுதிசெய்யப்பட்டுள்ளபடி பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மானியமாக ரூ.20 ஆயிரம் கோடி கோரப்பட்டது ஷீலா பேடி கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தவும், ஆந்திரப் பிரதேசத்தின் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 89 நிறுவனங்களை இரண்டாகப் பிரிக்கவும் ஆந்திரப் பிரதேச பிரதிநிதிகள் மத்திய அரசை வலியுறுத்தினர்.

மறுசீரமைப்பு சட்டம்இருப்பினும், தெலுங்கானா பிரதிநிதிகள் 53 நிறுவனங்களை மட்டுமே பிரிக்க ஒப்புக்கொண்டனர், அதைத் தொடர்ந்து அதன் ஆட்சேபனைகளுக்கு விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு கேட்டது.

ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களைப் பிரிப்பது தொடர்பான பிரச்சினையில், இரு மாநிலங்களும் ஒருமித்த கருத்துக்கு வரத் தவறியதால், இந்த விஷயத்தில் சட்ட கருத்தைப் பெற முடிவு செய்யப்பட்டது.

இதனால் கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Similar News