இந்தியா

சூட்கேசில் மறைத்து கடத்தப்பட்ட 10 குட்டி அனகோண்டா பாம்புகள் பறிமுதல்

Published On 2024-04-23 05:44 GMT   |   Update On 2024-04-23 05:44 GMT
  • சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர்.
  • நபரிடம் இந்த பாம்பு குட்டிகள் எதற்காக கடத்தி வரப்பட்டது என்று தீவிர விசாரணை நடத்தினர்.

பெங்களூர்:

கர்நாடக மாநிலம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாங்காக்கில் இருந்து பெங்களூருக்கு வந்த ஒரு பயணி ஒரு பெரிய சூட்கேசை கொண்டு வந்தார். சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர்.அப்போது அதில் வெள்ளி நிற பைகள் இருந்தது. இதையடுத்து அந்த பைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 10 அனகோண்டா பாம்பு குட்டிகள் இருப்பது தெரியவந்தது.



இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் சூட்கேசை கொண்டு வந்த நபரிடம் இந்த பாம்பு குட்டிகள் எதற்காக கடத்தி வரப்பட்டது என்று தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் இது குறித்து வனத்துறை தகவல் தெரிவித்தனர். அவர்கள் 10 அனகோண்டா பாம்பு குட்டிகளை பறிமுதல் செய்து, பாம்புகளை கடத்தி வந்த நபர் மீது வனவிலங்கு கடத்தல் பிரிவு மற்றும் சுங்க இலாகா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News