என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனகோண்டா"

    • அமேசான் காடுகளுக்குள் ஒரு டாக்குமெண்டரி படமாக்க குழு ஒன்று பயணிக்கிறது.
    • அமேசான் காடுகளில் வசிக்கும் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு, அந்தக் குழுவின் பயணத்தை மரண பயணமாக மாற்றுகிறது.

    அமேசான் காடுகளுக்குள் ஒரு டாக்குமெண்டரி படமாக்க குழு ஒன்று பயணிக்கிறது. அந்த குழுவில் இருக்கும் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இயற்கை வாழ்வை பதிவு செய்யும் நோக்கத்துடன் காடுகளுக்குள் நுழைகிறார்கள். ஆனால் அந்தப் பயணம் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கிறது.

    அமேசான் காடுகளில் வசிக்கும் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு, அந்தக் குழுவின் பயணத்தை மரண பயணமாக மாற்றுகிறது. திடீரென நிகழும் தாக்குதல்களில் சிலர் உயிரிழக்க, மீதமுள்ளவர்கள் தங்களது உயிரைக் காப்பாற்ற ஓட்டம் பிடிக்கிறார்கள். இறுதியில் அந்த அனகோண்டா தாக்குதலிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜாக் பிளாக் தனது இயல்பான நகைச்சுவை நடிப்பின் மூலம் கதைக்கு லேசான சிரிப்பை சேர்த்துள்ளார். சில இடங்களில் அவரது உடல் மொழியும், டைமிங் காமெடியும் ரசிக்க வைக்கிறது. பால் ரட் நடித்துள்ள கதாபாத்திரம் குழுவின் மன அழுத்தத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.

    அனகோண்டா பாம்பின் காட்சிகள் CGI மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. சில காட்சிகள் பயமுறுத்தும் வகையில் இருந்தாலும், முழுமையான திரில்லைக் கொடுக்க தவறுகிறது. பாம்பின் பிரம்மாண்டம் கண்களை கவர்ந்தாலும், அதன் தாக்கம் பார்வையாளரை முழுமையாக பதற்றத்தில் ஆழ்த்தவில்லை.

    இயக்கம்

    இயற்கையின் ஆபத்தையும், மனிதர்களின் பேராசையையும் இணைத்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் டாம் கோர்மிகன். திரைக்கதையில் இன்னும் கூடுதல் அழுத்தமும், விறுவிறுப்பும் இருந்திருந்தால் படம் மேலும் பலமாக அமைந்திருக்கும்.

    ஒளிப்பதிவு

    நைஜல் பிளக் ஒளிப்பதிவு அமேசான் காடுகளின் அழகையும், அதன் அபாயகரமான சூழலையும் நேர்த்தியாக பதிவு செய்துள்ளது.

    இசை

    டேவிட் பிளெமிங் பின்னணி இசை சில காட்சிகளில் பதற்றத்தை கூட்டுகிறது. பல இடங்களில் இசை மற்றும் காட்சி இணைப்பு சராசரியாகவே உள்ளது.

    • சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர்.
    • நபரிடம் இந்த பாம்பு குட்டிகள் எதற்காக கடத்தி வரப்பட்டது என்று தீவிர விசாரணை நடத்தினர்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பாங்காக்கில் இருந்து பெங்களூருக்கு வந்த ஒரு பயணி ஒரு பெரிய சூட்கேசை கொண்டு வந்தார். சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர்.அப்போது அதில் வெள்ளி நிற பைகள் இருந்தது. இதையடுத்து அந்த பைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 10 அனகோண்டா பாம்பு குட்டிகள் இருப்பது தெரியவந்தது.



    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் சூட்கேசை கொண்டு வந்த நபரிடம் இந்த பாம்பு குட்டிகள் எதற்காக கடத்தி வரப்பட்டது என்று தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் இது குறித்து வனத்துறை தகவல் தெரிவித்தனர். அவர்கள் 10 அனகோண்டா பாம்பு குட்டிகளை பறிமுதல் செய்து, பாம்புகளை கடத்தி வந்த நபர் மீது வனவிலங்கு கடத்தல் பிரிவு மற்றும் சுங்க இலாகா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×