இந்தியா

அக்னிபாத்துக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை போராட்டம்

Published On 2022-06-18 07:27 GMT   |   Update On 2022-06-18 07:54 GMT
  • அக்னிபாத்துக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் நாளை சத்யாகிரக போராட்டத்தை நடத்துகிறது.
  • ஜந்தர்மந்தரில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

புதுடெல்லி:

ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் புதிய திட்டமான அக்னிபாத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

4 ஆண்டுக்கு மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணி என்ற இந்த திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் அக்னிபாத்துக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் நாளை சத்யாகிரக போராட்டத்தை நடத்துகிறது.

ஜந்தர்மந்தரில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் கூறும்போது, "அக்னிபாத் திட்டம் நாட்டின் இளைஞர்களை கோபப்படுத்தியதால் அவர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவே காங்கிரஸ் கட்சி சத்யாகிரக போராட்ட முடிவை எடுத்துள்ளது" என்றார்.

Tags:    

Similar News