இந்தியா

ஓட்டுனரை தாக்கிவிட்டு டிரக்கில் இருந்து ரூ.1.3 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகள் கொள்ளை

Published On 2022-10-12 07:48 GMT   |   Update On 2022-10-12 07:48 GMT
  • சரக்கை வேறு வாகனத்திற்கு மாற்றிய பிறகு லாரியை கைவிட்டு ஓட்டுனரை சரோட்டி சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
  • கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நவி மும்பையில் உள்ள ரபேலில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி இன்று அதிகாலை லாரி ஒன்று சிகரெட் பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அப்போது மும்பை- அகமதாபாத் நெடுஞ்சாலையில் காரில் வந்த ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் லாரியை வழிமறித்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கினர்.

பின்னர், ஓட்டுனரின் கண்களை மூடிவிட்டு கொள்ளையர்களின் ஒருவன் லாரியை ஓட்டினான். இதையடுத்து, சரக்கை வேறு வாகனத்திற்கு மாற்றிய பிறகு லாரியை கைவிட்டு ஓட்டுனரை சரோட்டி சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டு ரூ. 1.36 கோடி மதிப்புள்ள சிகரெட்டுகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளன*

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News