இந்தியா

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2022-07-26 11:34 IST   |   Update On 2022-07-26 12:16:00 IST
  • முதல்வர் நிதிஷ் குமாருக்கு இந்த ஆண்டு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது இது இரண்டாவது முறையாகும்.
  • அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் நிதிஷ் குமாருக்கு இந்த ஆண்டு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக இந்த ஆண்டு ஜனவரியிலும், கொரோனா தொற்று உறுதியானது.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2-3 நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News