இந்தியா

வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது- மம்தா பானர்ஜி

Published On 2023-01-09 10:26 GMT   |   Update On 2023-01-09 10:31 GMT
  • வங்காளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
  • மாநிலத்தில் மதம், ஜாதி, மொழி வேறுபாடுகள் இருந்தபோதிலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி 20 கூட்டமைப்பின் நிதிசார் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது என்று அவர் கூறினார்.

முதல்வர் மம்தா பானர்ஜி தனது உரையின்போது கூறியதாவது:-

மாநில அரசு 12 மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளது. வங்காளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது.வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது

மாநிலத்தில் மதம், ஜாதி, மொழி வேறுபாடுகள் இருந்தபோதிலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். எங்கள் வளர்ச்சி முயற்சிகளின் பலன்களை மக்கள் பெறுவதை உறுதி செய்வதற்காக 'உங்கள் வீட்டு வாசலில் அரசாங்கம்' (துவாரே சர்க்கார்) திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்.

இத்திட்டம் தேசிய விருதை வென்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News