இந்தியா
தெருவோர ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் ரோபோ
- தெருவோர ஓட்டலில் பணியில் ஈடுபட்டுள்ள ரோபோ அதன் வாடிக்கையாளர்களுக்கு ஐஸ் கோலாக்களை வழங்கும் காட்சிகள் உள்ளன.
- உணவு பிரியரான கார்த்திக் மகேஸ்வரி என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
விஞ்ஞான வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் தற்போது பல துறைகளிலும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. நகரங்களில் உள்ள பெரிய ஓட்டல்கள் சிலவற்றில் ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் காட்சிகள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகிறது.
ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோவில் அகமதாபாத்தில் உள்ள தெருவோர ஓட்டல் ஒன்றில் ரோபோ வெயிட்டர் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் காட்சிகள் பயனர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் தெருவோர ஓட்டலில் பணியில் ஈடுபட்டுள்ள ரோபோ அதன் வாடிக்கையாளர்களுக்கு ஐஸ் கோலாக்களை வழங்கும் காட்சிகள் உள்ளன. அகமதாபாத்தை சேர்ந்த உணவு பிரியரான கார்த்திக் மகேஸ்வரி என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.