இந்தியா

சத்தீஸ்கரில் என்கவுண்டர் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Published On 2024-03-27 08:04 GMT   |   Update On 2024-03-27 08:04 GMT
  • பாதுகாப்பு படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை நடந்தது.
  • பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்டர் எம்.பி. தொகுதியில் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

பிஜப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் சிக்குர்பட்டி மற்றும் புஸ்பகா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சண்டை நடந்தது.

பாதுகாப்பு படை வீரர்களும், நக்சல் எதிர்ப்பு படையினரும் இணைந்து நடத்திய இந்த என்கவுண்டரில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இதில் ஒரு பெண் நக்சலைட்டும் அடங்குவார். பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்டர் எம்.பி. தொகுதியில் வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

Tags:    

Similar News