இந்தியா

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- இந்தியாவில் புதிதாக 5,108 பேருக்கு கொரோனா

Published On 2022-09-14 05:21 GMT   |   Update On 2022-09-14 05:21 GMT
  • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,675 பேர் குணமாகி உள்ளனர்.
  • இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 36 ஆயிரத்து 92 ஆக உயர்ந்தது.

புதுடெல்லி:

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

நேற்று பாதிப்பு 4,369 ஆக இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 7 ஆயித்து 471 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,675 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 36 ஆயிரத்து 92 ஆக உயர்ந்தது. தற்போது 45,749 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பால் மேலும் 31 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,216 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News