இந்தியா

ஜார்க்கண்ட் மருத்துவமனையில் தீ விபத்து- 2 மருத்துவர்கள் உள்பட 5 பேர் பலி

Published On 2023-01-28 07:07 GMT   |   Update On 2023-01-28 07:07 GMT
  • இறந்தவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டது. 5வது நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
  • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பேங்க் மோரில் மருத்துவமனையுடன் கூடிய நர்சிங் ஹோம் பகுதி இருக்கிறது.

தலைநகர் ராஞ்சியில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பகுதி இருக்கிறது. இன்று அதிகாலை 2 மணியளவில் இங்குள்ள மருத்துவமனை குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஸ்டோர் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறினார்கள். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் 2 மருத்துவர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். மருந்து நிறுவன உரிமையாளர் மருத்துவர் விகாஸ் ஹஸ்ரா, அவரது மனைவி டாக்டர் பிரேமா, உரிமையாளரின் மருமகன் சோஹன் கமாரி, வீட்டு பெண் தாரா தேவி ஆகியோர் தீ விபத்தில் மூச்சு திணறி இறந்து உள்ளனர்.

இறந்தவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டது. 5வது நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News