இந்தியா

வீட்டில் பயங்கர தீ விபத்து- 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலி

Published On 2022-12-28 09:12 IST   |   Update On 2022-12-28 09:12:00 IST
  • முதல் கட்ட விசாரணையில் அடுப்பிலிருந்து தீ பரவியதாக தெரிய வந்துள்ளது.
  • உயிரிழந்தோருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் உள்ள வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

சம்பவம் குறுத்து தகவல் அறிந்து விரைந்த மீட்புக் குழுவினர், அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் அருண் குமார் கூறும்போது, "மௌ மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

முதல் கட்ட விசாரணையில் அடுப்பிலிருந்து தீ பரவியதாக தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு நபருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்" என்றார்.

Tags:    

Similar News