இந்தியா

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 3 பேர் பலி- மீட்பு பணி தீவிரம்

Published On 2022-09-09 06:40 GMT   |   Update On 2022-09-09 06:40 GMT
  • 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8.50 மணி அளவில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கி அலறினார்கள்.

இதைத்தொடர்ந்து 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News