இந்தியா

புதிதாக 1,805 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

Published On 2023-03-27 04:44 GMT   |   Update On 2023-03-27 04:44 GMT
  • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 932 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 64 ஆயிரத்து 815 பேர் குணம் அடைந்துள்ளனர்.
  • தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 10,300-ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றைவிட 867 அதிகம் ஆகும்.

புதுடெல்லி:

இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நேற்று பாதிப்பு 1,890-ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 1,805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 397, குஜராத்தில் 303, கேரளாவில் 299, கர்நாடகாவில் 209, டெல்லியில் 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 5 ஆயிரத்து 952 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 932 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 64 ஆயிரத்து 815 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 10,300-ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றைவிட 867 அதிகம் ஆகும்.

கொரோனா பாதிப்பால் நேற்று குஜராத், சண்டிகர், இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் என 4 பேர் இறந்துள்ளனர்.

மேலும் கேரளாவில் விடுபட்ட பலிகளில் 2-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,837 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News