இந்தியா

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 121 ஆக குறைந்தது- டெல்லியில் ஒருவர் பலி

Published On 2023-01-10 06:29 GMT   |   Update On 2023-01-10 06:29 GMT
  • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 172 பேர் நலம் பெற்றுள்ளனர்.
  • இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 47 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்பு 170 ஆக இருந்த நிலையில் இன்று வெகுவாக குறைந்துள்ளது.

மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரத்து 215 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 172 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 47 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 2,319 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 52 குறைவு ஆகும். தொற்று பாதிப்பால் நேற்று டெல்லியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,722 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News