இந்தியா

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 102 பேருக்கு கொரோனா

Published On 2023-02-15 06:36 GMT   |   Update On 2023-02-15 06:36 GMT
  • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 94 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 797 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தற்போது 1,823 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புதுடெல்லி:

இந்தியாவில் புதிதாக 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 12-ந்தேதி பாதிப்பு 124 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 82, நேற்று 74 ஆக குறைந்த நிலையில் இன்று மீண்டும் 100-ஐ தாண்டியுளள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 376 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 94 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 797 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,823 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பால் நேற்று உத்தரபிரதேசத்தில் 2 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,756 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News