இந்தியா

சிறுவனை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது

Published On 2023-07-21 10:45 IST   |   Update On 2023-07-21 10:45:00 IST
  • டியூசனுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஒரு சிறுவனை தனது காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
  • மலப்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் இப்ராகிம் சகாபி (வயது 46). சம்பவத்தன்று இவர், மலப்புரம் கோட்டபாடி பகுதியில் டியூசனுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஒரு சிறுவனை தனது காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வீட்டில் இறக்கி விடுவதாக கூறி ஏமாற்றி சிறுவனை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளார்.

இதுகுறித்து மலப்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இப்ராகிம் சகாபியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags:    

Similar News