இந்தியா
null

சொர்க்கவாசல் திறப்பு: திருப்பதியில் இலவச டோக்கன் விநியோகம்- கூட்ட நெரிசலில் 3 பெண்கள் பலி

Published On 2025-01-08 21:30 IST   |   Update On 2025-01-08 22:02:00 IST
  • சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருப்பதியில் இலவச டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.
  • இலவச தரிசன டோக்கனைப் பெறுவதற்காக திருமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவித்தனர்.

சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. இலவச தரிசன டோக்கனைப் பெறுவதற்காக திருமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இதனால் அங்கு கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News