இந்தியா

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக அதிக நாட்கள் பதவி வகித்த சித்தராமையா

Published On 2026-01-06 16:32 IST   |   Update On 2026-01-06 16:32:00 IST
  • நான் எந்த சாதனையையும் முறியடிப்பதற்காக அரசியல் செய்யவில்லை.
  • தேவராஜ் உர்ஸ் 2,792 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த போது சித்தரமையா இரண்டரை ஆண்டுகள், டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பார்கள் என பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் டி.கே. சிவக்குமார் புதிய முதல்வராக பதவி ஏற்பார். கர்நாடக மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

ஆனால், 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன். காங்கிரஸ் கட்சி மேலிடம்தான் இது தொடர்பாக முடிவு செய்யும் என சித்தராமையா தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் 5 வருட முதலமைச்சர் பதவிக்காலத்தை நிறைவு செய்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 7-ந்தேதியுடன் அதிக காலம் கர்நாடக மாநில முதல்வராக இருந்த தேவராஜ் உர்ஸ் சாதனையை முறியடிக்க இருக்கிறார். தேவராஜ் உர்ஸ் 2,792 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். நாளையுடன் கர்நாடக முதல்வராக அதிக நாட்கள் பதவி வகித்தவர் என்ற பெருமையை சித்தராமையா பெற இருக்கிறார்.

இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-

நான் எந்த சாதனையையும் முறியடிப்பதற்காக அரசியல் செய்யவில்லை. இது வெறும் தற்செயல் நிகழ்வுதான். தேவராஜ் உர்ஸ் எத்தனை வருடங்கள் மற்றும் எத்தனை நாட்கள் முதல்வராக இருந்தார் என்பது எனக்குத் தெரியாது. இன்று மக்களில் ஆசீர்வாதத்தால், தேவராஸ் உர்ஸ் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

5 வருட பதவிக் காலத்தை நிறைவு செய்வது குறித்து மேலிடம்தான் முடிவு செய்யும். மேலிடம் எப்போது முடிவு செய்யும் என்று எனக்குத் தெரியாது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு நம்பிக்கை இல்லையென்றால், நான் எப்படி முதலமைச்சராகியிருப்பேன்?.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News