இந்தியா
தட்சிணேஸ்வர் காளி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜனாதிபதி
- ஜனாதிபதி திரவுபதி முர்மு மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- தட்சிணேஸ்வர் காளி கோவிலுக்குச் சென்ற ஜனாதிபதி முர்மு காளி தேவிக்கு மலர் தூவி வழிபாடு செய்தார்.
கொல்கத்தா:
ஜனாதிபதி திரவுபதி முர்மு மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாடியா மாவட்டத்தில் உள்ள எய்ம்ஸ் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கொல்கத்தாவில் உள்ள தட்சிணேஸ்வர் காளி கோவிலுக்குச் சென்றார். அங்கு காளி சிலைக்கு மலர் தூவி வழிபாடு செய்தார். அதன்பின், சாமியை தரையில் விழுந்து கும்பிட்டார்.
அவருடன் மாநில கவர்னர் ஆனந்த போஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.