இந்தியா

செவிலியர்களுக்கு புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

Published On 2022-11-07 08:11 GMT   |   Update On 2022-11-07 08:11 GMT
  • புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதானது செவிலியர்களுக்கான மிக உயரிய விருது ஆகும்
  • ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

புதுடெல்லி:

நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இது செவிலியர்களுக்கான மிக உயரிய விருது ஆகும்.

அவ்வகையில் 2021ம் ஆண்டுக்கான புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

Tags:    

Similar News