இந்தியா

ஜனாதிபதி திரவுபதி முர்மு

6 நாள் பயணமாக சுரினாம் மற்றும் செர்பியா புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

Published On 2023-06-03 20:54 GMT   |   Update On 2023-06-03 20:54 GMT
  • ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் பயணமாக வெளிநாடு புறப்பட்டார்.
  • முதல் கட்டமாக சுரினாம் செல்லும் அவர் தொடர்ந்து செர்பியாவிற்கு செல்கிறார்.

புதுடெல்லி:

ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் பயணமாக சுரினாம் மற்றும் செர்பியா புறப்பட்டார்.

ஜனாதிபதி தனது பயணத்தின் முதல் கட்டமாக ஜூன் 4 முதல் 6 வரை தென் அமெரிக்க நாடான சுரினாமுக்கு பயணம் செய்கிறார்.

சுரினாமில் இருந்து அவர் ஜூன் 7 முதல் 9 வரை தனது பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஐரோப்பாவில் உள்ள செர்பியாவுக்குச் செல்கிறார்.

சுரினாம் அதிபர் சான் சந்தோகி அழைப்பின் பேரில் ஜூன் 4 முதல் 6 வரை ஜனாதிபதி சுரினாமில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

சுரினாமுக்கு இந்தியர்கள் வருகை தந்ததன் 150-வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பிரதம விருந்தினராக கலந்து கொள்வதால் இந்த விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது முதல் ஐரோப்பிய பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News