இந்தியா

வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்: புதிய பாராளுமன்றம் திறப்புக்கு ஜனாதிபதி வாழ்த்து

Published On 2023-05-29 02:03 GMT   |   Update On 2023-05-29 02:03 GMT
  • பாராளுமன்றமானது நாட்டுக்கு வழிகாட்டும் வெளிச்சம்.
  • புதிய பாராளுமன்ற கட்டிடம் நமது ஜனநாயக பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்.

புதுடெல்லி :

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தியில், 'புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்' என கூறியிருந்தார்.

பாராளுமன்றமானது நாட்டுக்கு வழிகாட்டும் வெளிச்சம் என்று குறிப்பிட்டு இருந்த திரவுபதி முர்மு, புதிய பாராளுமன்ற கட்டிடம் நமது ஜனநாயக பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்றும் பெருமிதம் வெளியிட்டு இருந்தார்.

ஜனாதிபதியின் இந்த வாழ்த்துச்செய்தியை திறப்பு விழாவின்போது மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் வாசித்தார்.

Tags:    

Similar News