இந்தியா

உஜ்வாலா திட்ட 10வது கோடி பயனாளிக்கு கடிதம் எழுதி, பரிசளித்த பிரதமர் மோடி

Published On 2024-01-03 21:32 IST   |   Update On 2024-01-03 21:33:00 IST
  • ஏழை பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் 2016-ல் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் 10-வது கோடி பயனாளி உத்தர பிரதேசத்தின் மீரா மஞ்சி ஆவார்.

புதுடெல்லி:

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் 'உஜ்வாலா' திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தில், இலவசமாக அளிக்கப்படும் கியாஸ் இணைப்புக்கான செலவை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு செலுத்தி விடும். இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை முடிவு செய்தது. உஜ்வாலா திட்டத்தின் மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள்ளது.


இதற்கிடையே, உத்தர பிரதேசம் மாநிலத்துக்கு சமீபத்தில் சென்ற பிரதமர் மோடி, 10-வது கோடி பயனாளியான மீரா மஞ்சி என்ற பெண்மணி வீட்டுக்குச் சென்று, டீ குடித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில், உஜ்வாலா திட்டத்தின் 10-வது கோடி பயனாளியான மீரா மஞ்சிக்கு பிரதமர் மோடி பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவரது குடும்பத்துக்கு பரிசுகளும் அனுப்பி வைத்துள்ளார்.

Tags:    

Similar News