இந்தியா

நவராத்திரி விழா தொடக்கம்: பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2025-09-22 09:48 IST   |   Update On 2025-09-22 09:48:00 IST
  • நவராத்திரி பண்டிகை அனைவர் வாழ்விலும் புதிய பலத்தையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும்.
  • பக்தி, தைரியம், கட்டுப்பாடு, உறுதிப்பாடு நிறைந்த புனிதமான பண்டிகை நவராத்திரி விழா.

நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று தொடங்கி உள்ளது. இதனால் வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

நவராத்திரி பண்டிகை அனைவர் வாழ்விலும் புதிய பலத்தையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும். பக்தி, தைரியம், கட்டுப்பாடு, உறுதிப்பாடு நிறைந்த புனிதமான பண்டிகை நவராத்திரி விழா என கூறியுள்ளார். 

Tags:    

Similar News