இந்தியா

பிரதமர் மோடி

சிவமொக்கா விமான நிலையத்தை வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

Published On 2023-02-25 01:51 IST   |   Update On 2023-02-25 01:51:00 IST
  • சோகானே பகுதியில் ரூ.442 கோடி செலவில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த விமான நிலையத்தை நாளை மறுதினம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

பெங்களுரு:

சிவமொக்கா நகரை ஒட்டிய சோகானே பகுதியில் ரூ.442 கோடி செலவில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் திறப்பு விழா வரும் 27-ம் தேதி (நாளை) நடக்க உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி சோகனே பகுதியில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சோகானே விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் நேற்று கலெக்டர் செல்வமணி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பிரதமர் மோடி வருகையையொட்டி சிவமொக்காவில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News