இந்தியா

நாளை மறுதினம் செனாப் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Published On 2025-06-04 15:48 IST   |   Update On 2025-06-04 17:46:00 IST
  • ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ளது செனாப் பாலம்.
  • ஜம்மு காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ரெயில் இணைப்பு மிக முக்கியம்.

புதுடெல்லி:

உலகின் மிக உயரமான ரெயில்வே வளைவு அமைப்பான ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 6-ம் தேதி திறந்துவைக்கிறார் .

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம் முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.

ஜம்மு காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த ரெயில் இணைப்பு முக்கியமாகும்.

மேலும், ஸ்ரீநகரை ஜம்முவில் உள்ள கத்ராவுடன் இணைக்கும் இரு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த செனாப் பாலத்தின் திறப்பு விழா வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News