இந்தியா

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்

Published On 2025-08-22 01:24 IST   |   Update On 2025-08-22 01:24:00 IST
  • பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
  • உக்ரைன் விவகாரம் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து பேசப்பட்டது.

புதுடெல்லி:

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.

இந்த உரையாடலின்போது உக்ரைன் விவகாரம் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பர் அதிபர் மேக்ரானுடன் மிகச் சிறந்த உரையாடலை நடத்தினேன். உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சிகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினோம் என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் இம்மானுவேல் மேக்ரான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியுடன் பேசினேன். உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான வலுவான உத்தரவாதங்களுடன், நீடித்த அமைதியை நோக்கி நகர்வதற்காக, உக்ரைன் போர் குறித்த எங்கள் நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News