இந்தியா

பிரதமர் மோடி

கோரமண்டல் ரெயில் விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

Published On 2023-06-02 16:48 GMT   |   Update On 2023-06-02 16:55 GMT
  • ஒடிசாவின் பலாஷோர் அருகே கோரமண்டல் விரைவு ரெயில் சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
  • கோரமண்டல் ரெயில் விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புவனேஷ்வர்:

கோரமண்டல் விரைவு ரெயில் ஒடிசா மாநிலம் பலாஷோர் அருகே சரக்கு ரெயிலுடன் மோதியதில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் 300 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் ரெயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாகவும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடப்பதாகவும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த ரெயில் விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தால் வேதனை அடைந்துள்ளேன். துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவிடம் பேசினேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News