இந்தியா

துடிப்பான குஜராத் வர்த்தக மாநாடு: உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்பு

Published On 2024-01-10 05:12 GMT   |   Update On 2024-01-10 05:12 GMT
  • காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாடு தொடங்கியது.
  • இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று காலை தொடங்கி வைத்தார்.

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் வர்த்தக மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

துடிப்பான குஜராத் என்ற தலைப்பிலான 10-வது வர்த்தக மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் காந்தி நகரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்கின்றன.

முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சையத் அல் நயான், செக் குடியசு நாட்டின் பிரதமர், திமோர் லெஸ்டே அதிபர், மொசாம்பிக் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Tags:    

Similar News