இந்தியா

இந்தியா யாருக்கும் அடிபணியாது: மத்திய மந்திரி பியூஷ் கோயல்

Published On 2025-08-09 00:47 IST   |   Update On 2025-08-09 00:47:00 IST
  • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும்.
  • சவாலான காலங்களில் இந்தியா எப்போதும் வெற்றி பெறும் என்றார்.

புதுடெல்லி:

அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரி விதித்து வருகிறார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளார்.

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்காக வரியும், அபராத வரியும் விதித்து வருகிறார். இதனால் சர்வதேச அளவில் தொழில், வர்த்தக துறையினர் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சில் பங்கேற்ற மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறியதாவது:

இந்தியா யாருக்கும் அடிபணியாது. கொரோனா நெருக்கடியை நாடு ஒரு வாய்ப்பாக மாற்றி ஐ.டி. துறையில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியது.

சவாலான காலங்களில் இந்தியா எப்போதும் வெற்றி பெறும். உலகெங்கிலும் உள்ள நாடுகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய வர்த்தக கூட்டாளிகளைத் தேடுகின்றன.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும். இன்று இந்தியா வலுவானது, அதிக மரியாதைக்குரியது. நாடு புதிய வர்த்தக ஏற்பாடுகளை தொடர்ந்து உருவாக்கும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், சிலி, பெரு, நியூசிலாந்து மற்றும் இன்னும் பல நாடுகள் உள்பட பலதரப்பட்ட கூட்டாளிகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடர்கிறது. வர்த்தக ஒப்பந்தங்களையும் இறுதி செய்து வருகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News