இந்தியா

கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவருக்கு 7 ஆண்டு ஜெயில்

Published On 2023-01-11 15:54 IST   |   Update On 2023-01-11 15:54:00 IST
  • கேரளாவில் கடந்த 2016-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக முகமது போலகனி என்பவர் கைது செய்யப்பட்டார்.
  • முகமது போலகனிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த 2016-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக முகமது போலகனி என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இவர் மீதான வழக்கு கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு முகமது போலகனிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Tags:    

Similar News