இந்தியா

புனேயில் பழமையான பாலம் 6 வினாடியில் வெடிவைத்து தகர்ப்பு

Published On 2022-10-01 21:51 GMT   |   Update On 2022-10-01 21:51 GMT
  • மகாராஷ்டிராவின் புனேயில் பழமையான பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
  • இந்த பாலத்தைத் தகர்க்க சுமார் 600 கிலோ வெடி பொருள் பயன்படுத்தப்பட்டது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு இடையே புனே நகரில் சாந்தினி செளக் சந்திப்பில் மிகவும் பழமையான பாலம் உள்ளது. பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இப்பாலத்தை இடித்துவிட்டு புதிய பல் அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பழமையான பாலம் சுமார் 600 கிலோ வெடிபொருள் வைத்து நேற்று தகர்க்கப்பட்டது. முன் எச்சரிக்கையாக நேற்று இரவு 10 மணிக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாலம் தகர்க்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியது.

ஏற்கனவே டெல்லி இரட்டை கட்டிடங்களைத் தகர்த்த மும்பை நிறுவனம்தான் இந்தப் பாலத்தையும் தகர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News