இந்தியா

யோகி ஆதித்யநாத், நிதின் கட்கரி

அமெரிக்காவுக்கு இணையான சாலைகள் உ.பி.யில் அமைக்கப்படும் - நிதின் கட்கரி

Published On 2022-10-09 12:14 GMT   |   Update On 2022-10-09 12:14 GMT
  • உத்தர பிரதேசத்தில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்டப்பணிகள் நடைபெறும் என நிதின் கட்கரி கூறினார்.
  • 2024-ம் ஆண்டுக்குள் உத்தர பிரதேசத்தில் அமெரிக்காவுக்கு இணையான சாலைகள் அமைக்கப்படும்.

லக்னோ:

உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி பேசியதாவது:

வரும் 2024-ம் ஆண்டு முடிவதற்குள் உத்தர பிரதேசத்தில் அமெரிக்காவுக்கு இணையான சாலை உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

இதற்காக, உத்தர பிரதேசத்தில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்ட பணிகள் நடைபெறும். அரசாங்கத்திடம் தரமுள்ள சாலைகளை அமைப்பதற்கு பண பற்றாக்குறை இல்லை.

உத்தர பிரதேச மாநிலத்தை பொருத்தவரை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் சாலை கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்களை பயன்படுத்துவதே, தற்போதைய காலத்தின் தேவை ஆகும். பொருளாதாரத்துடன், சுற்றுச்சூழலிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News