இந்தியா

இமாச்சலில் மழையால் சேதமடைந்த சாலைகள், பாலங்கள் புனரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு- மத்திய அமைச்சர் உறுதி

Published On 2023-07-20 23:02 GMT   |   Update On 2023-07-20 23:02 GMT
  • நிதி, சேது பாரதம் யோஜனாவின் கீழ் வழங்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தகவல்.
  • நிலம் சரியும் இடங்களைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கட்காரி உத்தரவு.

இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை புனரமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளதாக அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் விக்ரனாதித்ய சிங் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி, சேது பாரதம் யோஜனாவின் கீழ் வழங்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சிங் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது, தேசிய நெடுஞ்சாலைகளைச் சுற்றி நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கட்காரி உத்தரவிட்டுள்ளதாக சிங் கூறினார்.

மேலும், சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த பாலங்களை சீரமைக்கவும், மாநில பொதுப்பணித்துறை சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கவும் நிதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கட்கரி உத்தரவிட்டதாக சிங் கூறினார்.

Tags:    

Similar News