இந்தியா
எதிர்பார்த்ததை விட மகத்தான வெற்றி: நிதிஷ் குமார் மகன்
- தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது.
- நிதிஷ் குமார் கட்சி 101 இடங்களில் போட்டியிட்டு 85 இடங்களில் வெற்றி பெற்றது.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி- இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி 243 இடங்களில் 202-ல் வெற்றி பெற்றது. பீகார் தேர்தலில் அக்கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்தது. பாஜக 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில் நிதிஷ் குமார் குமார் மகன் நிஷாந்த் "நாங்கள் தீர்க்கமான வெற்றி கிடைக்கும் என உறுதியாக இருந்தோம். ஆனால் இறுதி முடிவு நாங்கள் எதிர்பார்த்ததைவிட மகத்தானது. மிகப்பெரிய வெற்றியை அளித்த பீகார் மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். தந்தையின் சாதனைப் பதிவு மற்றும் மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான அவரது தொலைநோக்குப் பார்வையைப் பார்த்த பிறகு மக்கள் எங்களுக்கு மிகப்பெரிய பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்" என்றார்.