இந்தியா

பத்ரிநாத் கோவிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.5 கோடி நன்கொடை

Published On 2022-10-14 04:04 GMT   |   Update On 2022-10-14 04:04 GMT
  • ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி.
  • பத்ரிநாத் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார்.

பத்ரிநாத் :

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி நேற்று உத்தரகாண்டின் பத்ரிநாத் கோவிலுக்கு சென்றார்.

இமயமலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஹெலிகாப்டரில் சென்ற அவர், அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

பின்னர் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.5 கோடி நன்கொடை வழங்கினார்.

Tags:    

Similar News